துவாரகா

துவாரகாவில் இந்தியாவில் முதல்முறையாகச் சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கி கப்பல் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பழம்பெரும் நகரமான துவாரகா கடலுக்கு அடியில் தொலைந்து விட்டதாக நம்பப்படுகிறது.  இங்கு குஜராத் அரசு, சுற்றுலாப் பயணிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.  துவாரகா என்பது ‘இந்துக் கடவுளான கிருஷ்ணரின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது.

இத்தகைய கலாச்சார முக்கியத்துவம் கொண்ட துவாரகாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக நீருக்கடியில் செய்யப்படும் சுற்றுலா வசதி இதுவாகும். 2024 அக்டோபரில் தீபாவளிக்கு முன்னதாக இந்த திட்டத்தைச் செயல்படுத்த அரசு இலக்கு வைத்துள்ளது.

இதன்படி, கடலுக்கு அடியில் 100 மீட்டர் தூரத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்து செல்லப்பட்டு, நீருக்கடியில் உள்ள கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பார்கள்.  இதில் ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலும் 24 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும்.

இந்த கப்பல் இரண்டு அனுபவம் வாய்ந்த பைலட்கள் மற்றும் ஒரு தொழில்முறை பணியாளரால் வழி நடத்தப்படும் .என்றும் அனைத்து பயணிகளுக்கும் ஜன்னல் பார்வையை வழங்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.