அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, உணவு இடைவேளையின்போது 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

பிரித்விஷா மிட்செல் ஸ்டார்க் பந்தில் டக்அவுட் ஆக, மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பேட் கம்மின்ஸ் பந்தில் வீழ்ந்தார். இருவருமே பெளல்டு முறையில் அவுட்டானார்கள். அப்போது அணியின் எண்ணிக்கை 32 மட்டுமே.

தற்போது, புஜாரா 90 பந்துகளில் 17 ரன்களுடனும், கேப்டன் விராத் கோலி 22 பந்துகளில் 5 ரன்களுடனும் மிகவும் நிதானமாக ஆடிவருகின்றனர். இந்திய அணி 25 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.