ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் இன்று பாகிஸ்தான் பயங்கரவாதி திடீர் தாக்குதல் நடத்தினான். இதில், ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார்.

தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியான கைதி தப்பினார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மஹராஜ் ஹரி சிங்  மருத்துவமனைக்கு வெளியே திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த  ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் இறந்துவிட்டார், மற்றொருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார்.

பாகிஸ்தான் பயங்கரவாதியான நவத் என்ற  அந்த கைதி, இன்று வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சிறையில் இருந்து, அழைத்து வரப்பட்டதாகவும்,  அப்போது மருத்துவமனை வளாகத்தினுள், பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை  பறித்து, போலீசார் மீது துப்பாகி சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதாகவும், தப்பியோடிய கைதியை போலீசார் தேடி வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.