புவனேஸ்வர்:

டிசாவில் பட்டாசு தொழிற்சாலைகளில் நடைபெற்ற வெடி விபத்து காரணமாக  10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பல இடங்களில் அனுமதி இல்லாமல் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது தீபாவளியையொட்டி பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.

இந்நிலையில்,  அனுமதி இல்லாத பட்டாசு தொழிற்சாலைகளில் நடைபெற்ற வெடி விபத்துகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

பாலசோர் மாவட்டத்தில் உள்ள குன்டச்சக்கா கிராமத்தில் கோலக் பிரதான் என்பவர் வீட்டில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்து வந்தபோது  ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலூம்  பூரி மாவட்டற்குட்பட்ட பிப்லி பகுதியில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் சிக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தாள். ரூர்கேலா நகர் பகுதியில்பட்டாசு கடைகளில் நேற்றிரவு தீபிடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.