லக்னோ:

த்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை  ஸ்ரீ. ஆனந்த் சிங் பிஷ்ட் இன்று காலமானார். அவருக்கு வயது 88.

வயது முதிர்வு காரணமாக உடல்குன்றிய நிலையில், டெல்லியில் உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனையில், பிஷ்ட் ஆபத்தான நிலையில்  மார்ச் 15 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கனவே சிறுநீரகம் மற்றும் கல்லீரல் வியாதியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு இரைப்பை நோயியல் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை மேலும்  மோச மடைந்தது, அவரை வென்டிலேட்டரில் வைத்து,  டயாலிசிஸ் மேற்கொள்ளப் பட்டது.  பின்னர் ஐ.சி.யூ வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில்,   சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.44 உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை உத்தரபிரதேச மாநில கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) அவனிஷ் கே அவஸ்தி தெரிவித்தார்.