டெல்லி:
விவசாயிகள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்லியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உரிய முறையில் அமலாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் விவசாய அமைப்புகள் இன்று போராட்டம் நடத்த உள்ளன.

டெல்லி – ஹரியானா எல்லைப் பகுதியான டிக்ரியில் விவசாயிகள் வருகையை தடுக்க காவல் துறையினர் தடுப்புகளை வைத்துள்ளனர்.