டெல்லி:  வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் உள்பட பல்வேறு அறிவிப்பு வெளியிட்ட மோடி, அதை நிறைவேற்றாத நிலையில்,  அவரது  நீண்ட வரலாறு காரணமாக விவசாயிகள் அவரை நம்பவில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் டிவிட் பதிவிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் வடமாநில விவசாயிகளின் போராட்டம் ஒரு மாதத்தை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இன்று மீண்டும் விவசாயிகளுக்கும், மத்தியஅரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் அறிவித்த பல்வேறு அறிவிப்புகளை சுட்டிக்காட்டி டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைகள்”

“எனக்கு 50 நாட்கள் நேரம் கொடுங்கள், இல்லையென்றால் …”

“நாங்கள் 21 நாட்களில் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்”

“எங்கள் எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை அல்லது எந்த பதவியையும் ஏற்கவில்லை”

இதுபோன்ற மோடிஜியின் நீண்ட வரலாற்றின் காரணமாக விவசாயிகள் அவரை நம்பவில்லை என காட்டமாக விமர்சித்துள்ளார்.