நெய்வேலி:
நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதிமுக புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் நாளை நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர்

தடையை மீறி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.