மும்பை

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தாக்குதலால் இன்று உயிர் இழந்தார்.

சென்ற மாதம் 8 ஆம் தேதி அன்று பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  இதையொட்டி அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

நேற்று  அவர் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக  மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது..  அவர் தொடர்ந்து 29 நாட்களாகச் சிகிச்சையில் இருந்தார்.  இன்று காலை அவர் உயிர் இழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

லதா மங்கேஷ்கர் மரணத்தால் லட்சக்கணக்கான ரசிகர்கள் மிகவும் துயர் அடைந்துள்ளனர்.