மும்பை

பிரபல பாலிவுட் பாடகரும் இசையமைப்பாளருமான பப்பி லஹரி மரணம் அடைந்துள்ளார்.

இந்தி மட்டுமின்றி, தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களுக்கும் இசை அமைத்தவர் பப்பி லஹரி ஆவார்.  இவர் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியான நன்ஹா ஷிகாரி என்னும் இந்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார்.   1980களில் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

அவர் தமிழில் அபூர்வ சகோதரிகள், பாடும் வானம்பாடி உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துப் புகழ் பெற்றார்.  குறிப்பாக பாடும் வானம்பாடி திரைப்படப் பாடல்கள் இன்றளவும் ஹிட் ஆக உள்ளன.

தற்போது 69 வயதாகும் பப்பி லஹரி உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள கிரிடி கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.   சிகிச்சை பலனின்றி இன்று காலை பப்பி லஹரி மரணம் அடைந்தார்.