
இந்தியன் 2 தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தெலுங்கில் தில் ராஜு தயாரிப்பில் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்க தயாரானார் ஷங்கர்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பான் – இந்தியா திரைப்படமாக இது தயாராகிறது. இது ராம் சரணின் 15-வது படமாகவும்.
இப்படத்திற்கான வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறார் ஷங்கர். முதல்கட்டமாக நாயகியாக நடிக்க கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளார். தமன் இசையமைக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பகத் பாசில், அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது நடிகர் ஜெயராமையும் படத்தில் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவொரு பொலிடிகல் ஆக்ஷன் படமாக தயாராகிறது,
Patrikai.com official YouTube Channel