a
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி  தனது பக்கத்தில் தொடர்ந்து கட்சி ரீதியான பதிவுகளை இடுவது குறித்து விளக்கம் அளிக்கும்படி  தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் விதிமுறைகளை மீறி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுகளை வெளியிடுவதாக அதிமுக ஐ.டி. பிரிவு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
அந்த புகாரை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம்,  கருணாநிதியின் பேஸ்புக் பதிவு குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த நோட்டீஸை அனுப்பிய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி  வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்.
மேலும் வரும் 17ம் தேதி வரை கருணாநிதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தேர்தல் குறித்து எந்த பதிவும் வெளியிடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியுள்ளது.