சென்னை:

பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்து உள்ளார்.

மாநிலத்தில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும் (Government Polytechnic Colleges) உள்ளன, அவை சுமார் 16,890 இடங்களைக் கொண்டுள்ளன (வர்த்தக மற்றும் வர்த்தகத் துறையின் நிர்வாகத்தின் கீழ் வரும் மூன்று கல்லூரிகள் உட்பட). இந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்க 30,000 மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.

அதன்படி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் www.tngptc.in மற்றும் www.tngptc.com மூலம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்டு 4ந்தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விண்ணப்பத்திற்கான கால அவகாசம் ஆகஸ்டு 20ந்தேதி வரை நீட்டித்து உயர்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.