ஐதராபாத்

தேர்தல் முடிவுக்கு பிறகு நடந்த கருத்துக் கணிப்பில் தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை அமையும் என கூறப்படுகிறது.

தற்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் முடிவடைந்துள்ளன.

இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும 3 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாக உள்ளன.

தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவின் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.  ஆனால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளதால் தெலுங்கானாவில் முக்கோண போட்டி நிலவுகிறது.

தற்போது தெலுங்கான சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன்.

சி என் என் செய்தி நிறுவனம் தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 இடங்களில் பி.ஆர்.எஸ் 58,காங்கிரஸ் 56, பாஜக 10 இடங்களைப் பெறலாம் என்று கருத்துக்  கணிப்பு வெளியிட்டுள்ளது.

ஜன்  கி பாத் செய்தி  நிறுவனம் தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ் 40-55, காங்கிரஸ் 48-64, பாஜக 7-13 இடங்களைப் பெறலாம் எனக் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

டி வி 9 செய்தி நிறுவனம் தெலுங்கானாவில் காங்கிரஸ் 49 -59, பி.ஆர்.எஸ் 48-58, பாஜக 5-10 மற்றவை 6-8 இடங்களைப் பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.