டில்லி

முன்னாள் பாஜக அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம் அடைந்தார்.

பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

அவர் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளை நிர்வகித்துள்ளார்.

தற்போது ஜஸ்வந்த் சிங் குக்கு 82 வயதாகிறது.

அவர் இன்று மரணம் அடைந்துள்ளார்.

அவருடைய மறைவுக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், “ “பாஜகவை வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங்!” எனப் புகழ்ந்துள்ளார்