மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக மார்ச் 15 ம் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலை தேறிவந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்பட்டது இதனால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள அவர் இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.