ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் துவங்கிய நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இதனால் சட்டமன்றம் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து இந்தக் கூட்டத்தொடரில் இன்று தனது வருகையை பதிவு செய்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.