ashஇந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 93.5 ஓவர்களில் 283 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர், முதல் இன்னிங்ஸ்-யை துவங்கிய இந்தியா 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 84 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 57, ஜடேஜா 31 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நேற்று மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் மொத்தம் 138.2 ஓவர்களில் 417 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின் 113 பந்துகளில் 11 பவுண்டரி உட்பட 72 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 170 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகள் உட்பட 90 ரன்கள் எடுத்தார். ஜெயந்த் யாதவ் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 38 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் சேர்த்தது. ஜோ ரூட் 36 ரன்களுடனும், கேரத் பட்டி ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.