மான்செஸ்டர்:

ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி பல சாதனைகளை படைத்தது.


இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடியது.26 ரன்கன் எடுத்த நிலையில் வின்ஸ் ஆட்டமிழந்தார்.

பின்னர் பேர்ஸ்டோவ்-ஜோ ரூட் ஜோடி அபாரமாக ஆடியது. 99 பந்தில் 90 ரன்கள் எடுத்த நிலையில் பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டுடன் கேப்டர் மோர்கன் ஜோடி சேர்ந்தார். மோர்கன் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்தின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

36 பந்துகளில் அரை சதம் அடித்த மோர்கன், 57 பந்துகளில் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய ஜோ ரூட் 54 பந்துகளில் அரை சதம் அடித்து சதத்தை நோக்கி முன்னேறினார்.

47-வது ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர்.
மோர்கன் ஆட்டமிழக்கும் போது இங்கிலாந்து 47 ஓவரில் 359 ரன்கள் எடுத்திருந்தது. களமிறங்கிய ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர், தலா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மொயீன் அலி 9 பந்துகளில் 31 ரன்கள் விளாச, இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன்களை குவித்தது.

அதன்பின், 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. குல்பதின் நயீப் 37 ரன்னிலும், ரஹமத் ஷா 46 ரன்னிலும், அஸ்கர் ஆப்கன் 44 ரன்னிலும் அவுட்டாகினர்.

ஆப்கானிஸ்தானின் ஹஷ்மத்துல்லா ஷஹிடி ஓரளவு தாக்குப்பிடித்து 76 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 247 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சாதனை மேல் சாதனை

உலகக் கோப்பை போட்டியில் 397/6 என்று நிலையில் அதிகபட்ச ரன்களை இங்கிலாந்து எடுத்துள்ளது.
இதன்மூலம், 17 பந்துகளில் அதிக சிக்ஸர் அடித்த பெருமையை இயோயின் மோர்கன் பெறுகிறார்.
வேகமாக சதம் எடுத்த வீரர் என்ற பெருமையை மோர்கன் பெறுகிறார்.

அதிக சிக்ஸர்களை அடித்த அணி அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெறுகிறது.

 

அதன்பின், 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. குல்பதின் நயீப் 37 ரன்னிலும், ரஹமத் ஷா 46 ரன்னிலும், அஸ்கர் ஆப்கன் 44 ரன்னிலும் அவுட்டாகினர்.

ஆப்கானிஸ்தானின் ஹஷ்மத்துல்லா ஷஹிடி ஓரளவு தாக்குப்பிடித்து 76 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 247 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.