லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் ஆனது பாகிஸ்தான் அணி. இதனையடுத்து, நான்காம் நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கவுள்ளது.

தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 583 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியின் ஆஸர் அலி, 141 ரன்கள் எடுத்து தனியொருவனாகப் போராடினார். அவர் கடைசிவரை அவுட்டாகவில்லை. முகமது ரிஸ்வான் மட்டுமே அவருக்கு ஓரளவு ஒத்துழைப்பு(53) கொடுத்தார். வேறு யாரிடமிருந்தும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

இறுதியில் 3ம் நாளில் 273 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது அந்த அணியின் ஆட்டம். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமிருக்கும் சூழலில், இப்போட்டியை டிரா செய்ய வேண்டுமென்றால், பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் சாகசம் செய்ய வேண்டும்.