ண்டன்

ங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் போது இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனால் நாடு தழுவிய ஊரடங்கு இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அப்போது இவர் தனது அலுவலகத்தில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. தமது அலுவலகத்தை அவர் தவறாகப் பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தச் சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவர் தவறாகப் பயன்படுத்தினார் என இந்தக்குழு அறிக்கை தாக்கல் செய்தால், நாடாளுமன்றத்தில் இருந்து 10 நாட்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்.

தற்போது போரிஸ் ஜான்சன் நாடாளுமன்ற உறுப்பினர்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். போரிஸ் ஜான்சனின் ராஜினாமா ஏற்கப்பட்டு  உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஆகவே அவர் வெற்றி பெற்றிருந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இது குறித்து,

”நாடாளுமன்றத்தில் விட்டு வெளியேறுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதுவும் தற்போதை நிலையில். சிலருடைய குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரம் இல்லாமலும், குறைந்தபட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் ஒப்புதல் கூட இல்லாமலும் சிலரால் நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன்.

விசாரணைக்குழுவிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் என்ன வியப்பு என்றால், என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தனர் என்பது தெரியவந்தது”

என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.