லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. தொடர் சமன் ஆகுமா? அல்லது இங்கிலாந்து கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டி மழையால் தடைபட, இரண்டாம் போட்டியில் பாகிஸ்தான் 195 ரன்கள் அடித்தும், இங்கிலாந்து வென்றது.

இந்நிலையில், இந்த மூன்றாவது போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில், இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

டெஸ்ட் கோப்பை கைக்கு கிடைக்காத நிலையில், இந்த டி-20 கோப்பையை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாவது கிடைக்குமா? என்று பாகிஸ்தான் மும்முரமாக முயலும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.