மதுரை: லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமின் மனுமீதான விசாரணையை வரும் 28ந்தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனுமீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி விவேக் குமார் முன்  நடைபெற்றது.

அப்போது, லஞ்ச ஒழிப்பு காவல்துறை தரப்பில், அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,  லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி,  வழக்கு விசாரணயை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.