மத்திய பிரதேசம்:
த்திய பிரதேச மாநிலத்தில் தலையில் காயமடைந்த நபருக்கு ஆணுறை வைத்து கட்டுப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் போர்சா சமூக சுகாதார மையத்தில் தலையில் காயமடைந்த வயதான பெண் ஒருவருக்கு சுகாதார ஊழியர்கள் தலையில் ரத்தம் நிற்கவில்லை என்பதால் ஆணுறையுன் கவரை காயம்பட்ட இடத்தில் வைத்து கட்டு போட்டுள்ளனர். சில நாட்கள் கழித்து அந்த கட்டை மாற்றுவதற்கு மொரேனா மாவட்ட மருத்துவமனைக்கு வந்த பணியில் இருந்த மருத்துவர் ஏற்கனவே தலையில் போடப்பட்ட கட்டை கழற்றிய போது உள்ளே ஆணுறை கவர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரிடம் கேட்ட போது காயம் ஏற்பட்ட அன்று போர்சா சமூக சுகாதார மையத்தில் தனக்கு கட்டு போட்டுவிட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பான விடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்த போர்சா சமூக சுகாதார மையத்தின் ஊழியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.