சென்னை:
மிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்த தகவலில்,
ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி, மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.