டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவர் தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில், ஆகஸ்ட் 31ம் தேதி தம்மை தேர்தல் ஆணையர் பதிவில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுள்ளார்.

ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அசோக் லவாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்தே, தமது தேர்தல் ஆணைய பதவியை அவர் ராஜினாமா செய்து இருக்கிறார். ஆசிய வளர்ச்சி வங்கி தலைவரின் கீழ், 6 துணைத் தலைவர்கள் அடங்கிய நிர்வாகக் குழு இருக்கிறது.

துணைத் தலைவர் 3 ஆண்டுகள் அந்த பதவியில் இருக்கலாம்.  தேவைப்பட்டால் மேலும் 2 ஆண்டுகள் அவருக்கு வழங்கப்படும். லவாசாவின் இந்திய தேர்தல் ஆணைய பதவி நிறைவடைய 2 ஆண்டுகள் இருக்கின்றன.

இவர் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த மூத்த தேர்தல் ஆணையர். தேர்தல் ஆணையத்தில் பணியாற்றினால், 2022ம் அக்டோபரில் தலைமைத் தேர்தல் ஆணையராக ஓய்வு பெறுவார்.