டெல்லி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பணிகளை மேற்கொள்ள தொகுதி வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த இக்குழுவினர் ஆய்வு நடத்திவிட்டு சென்றனர். இந் நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பணிகளை மேற்கொள்ள தொகுதி வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பதிவு அலுவலர் மற்றும் உதவி பதிவு அலுவலர்கள் ஆகியோரையும் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.