ரோடு

நாளை மாலையுடன் ஈரோடு இடைத் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.

வரும் 5 ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. எனவே தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி ஆகியோர் உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

இதில் தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தனர். மேலும் கூட்டணி கட்சி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் வேட்பாளருடன் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்காக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் முகாமிட்டு தினந்தோறும் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.  தவிரஇந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களும் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் தொகுதி முழுக்க சென்று வாக்குகள் கேட்டு வருகிறார்கள்.

தேர்தல் பிரசாரம் நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. . அதைத் தொடர்ந்து வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் 5 ஆம்  தேதி வாக்குப்பதிவு நடைபெற்று 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.