பாரீஸ்:

மர்ம நபர் ஒருவர் ஏறியதால், ஈஃபிள் டவர் மற்றும் அதன் அருகில் உள்ள தெருக்கள் அடைக்கப்பட்டன.


இது குறித்து பாரீஸ் தீயணைப்புப் படையினர் கூறும்போது, திங்களன்று மர்ம நபர் ஒருவர் மளமளவென இந்த டவர் மீது ஏறினார்.

மேலே ஏறியவர் 2-வது தளத்தில் நின்று கொண்டிருந்தார். அவரைப் பத்திரமாக கீழே இறக்கினோம். எதற்காக அவர் இவ்வளவு உயரத்தில் ஏறினார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை என்றனர்.

இது குறித்து பாரீஸ் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற மற்று பாரீஸின் முக்கிய அடையாளமான ஈஃபிள் டவர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தெருக்கள் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.