டெல்லி: கோவிட் 19 தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நவோதயா வித்யாலயங்களில் இலவச கல்வி வழங்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், கொரோனா தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, அந்தந்த மாநிலங்களில் உள்ள  நவோதயா வித்யாலயா  பள்ளிகளில் இலவச கல்வி வழங்க வேண்டும், இது குறித்து மத்தியஅரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.