டில்லி

அமலாக்கத்துறை அதிகாரிகள் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி  கே சிவகுமாரைக் கைது செய்துள்ளனர்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி சே சிவகுமார் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் எழுந்தது. அதையொட்டி அமலாக்கத்துறை அதிகாரிகள் டி கே சிவகுமாரிடம் நான்கு நாட்களாக விசாரணை நடத்தி வந்தது.

ஐந்தாம் நாளான இன்றுடன் அந்த விசாரணை முடிவடைந்தது. விசாரணை முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னாள் கர்நாடக அமைச்சர் டி கே சிவகுமாரைக் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு கர்நாடகாவில் பாஜக முயற்சியால் கவிழ்ந்த போது  சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தக்க வைத்துக் கொள்ள டி கே சிவகுமார் மிகவும் முயற்சி எடுத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.