டெல்லி: 5 மாநில சட்டப்பேரவையின் காலம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைய உள்ளதால், அந்த மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் குறித்து, அகில இந்திய தேர்தல் ஆணையம்  இன்று 12 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் பதவிக்காலம் இந்த ஆண்டுக்குள் முடிவடைய உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறுகட்ட ஆலோசனைகளை நடத்திய நிலையில், இன்று 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியைஇந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.  இன்று மதியம் 12மணி அளவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது.