கொல்கத்தா

தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் கூடுதலாக 100 கம்பெனி ஆயுதப்படையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளது. 

நாடெங்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த அரசு தரப்பில் ஆலோசனை அளிக்கப்பட்டது..

எனவே இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மேற்கு வங்காளத்தில் 55 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் மற்றும் 45 கம்பெனி எல்லைப் பாதுகாப்புப் படையினரைத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.

வரும் 15 ஆம் தேதிக்கு முன்பாக மேற்கு வங்காளத்தில் மேலும் கூடுதலாக 100 கம்பெனி ஆயுதப் படையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேற்கு வங்கத்தில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.