திருவனந்தபுரம்

த்திய பாஜக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் சொத்து சரிபார்க்கத் தேர்தல் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ர் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிடுகிறார்.

ராஜீவ் சந்திரசேகரின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் அவரது உண்மையான சொத்துக்களுடன் பொருந்தவில்லை எனக் காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

எனவே ராஜீவ் சந்திரசேகர் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களைச் சரிபார்க்க மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.