அய்ஸ்வால்: மிசோரமில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட, ஒருவர் பலியானார். ஒடிஷாவிலும் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.

மிசோரம் மாநிலத்தில் அய்ஸ்வாவல் நகரில் லிமென் சாம்டிலேங் சாலையில் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.  அந்த குவாரி அமைந்திருந்த பகுதியில் திடீரென பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

அதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வால் நகரின் வடகிழக்கே 25 கி.மீ. தொலைவில் நேற்று மாலை 4.16 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

2வது நாளாக இன்றும் நிலநடுக்கம் பதிவாக, மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனிடையே, ஒடிஷாவில் இன்று மாலை 4.40 மணியளவில் நிலநடுக்கம் பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ராயகடா மாவட்டத்தில் காசிப்பூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவாக பதிவானதாக அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் ஏதேனும் உயிரிழப்புகளோ, சேதமோ ஏற்பட்டது குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.