ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜஸ்தானின் சிகார் நகரில் இன்று இரவு 8.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், இந்த நிலநடுக்கத்தால் சிகார் நகரின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்போ, பொருட்சேதங்களே ஏற்படவில்லை என்று தெரிகிறது.