துருக்கியின் நூர்தாகி பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகி உள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 10ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதிபர் எர்டோகன் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் 6ந்தேதி  அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி – சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இதையடுத்து, அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் ஒரே நாளில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், இரவு பகல் என பாராமல் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பலி எண்ணிக்கை 9500ஐ ஆயிரத்தை தாண்டியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், இரவு பகல் என பாராமல் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று   மீண்டு்ம நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் நூர்தாகி பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.  இதற்கிடையில் இந்திய வீரர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும், இடங்களை துருக்கி அதிபர் எர்டோகன் பார்வையிட்ட வருகிறார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் காரணமாக துருக்கி  தென்கிழக்கில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய போதிலும், இன்னும் மூன்று மாதங்களுக்குப் பிறகு துருக்கியில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் என்ற அனுமானத்தில் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ள அந்நாட்டு ஊடகங்கள், துருக்கியில் அதிபர் எர்டோகன் மூன்று மாத அவசரகால நிலையை அறிவித்ததைத் தொடர்ந்து, இரண்டு பாரிய நிலநடுக்கங்களால் தாக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீரர்களை நிலைநிறுத்தத் தொடங்கியது. எர்டோகன் புதன்கிழமை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மாகாணங்களுக்குச் செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.