காபூல்

இன்று பிற்பகல் 2.54 மணிக்கு ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நில நடுக்கங்கள் பைசாபாத் அருகே ஏற்பட்டது.  நிலநடுக்கங்கள் முறையே ரிக்டர் அளவில் 4.4 மற்றும் 4.8 ஆகப் பதிவாகி உள்ளன.

இன்று பிற்பகல் மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் 2.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

காபூல் அருகே 29 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்த போதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.