ரவுக்கானியா, சிலி

சிலி நாட்டில் அரவுக்கானியா பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சிலி நாட்டில் தெற்கு பகுதியில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி அரவுக்கானிய பகுதி அமைந்துள்ளது.   இந்த பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இதனால் இங்கு கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கி உள்ளன.

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாகப் பதிவாகி உள்ளது.  இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.  கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை.