இந்திய தலைநகர் டில்லியில் இன்று காலை மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவானது.

டில்லியில் இன்று காலை 7.16 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனா்.

இதே நேரத்தில் மிசோரம் மாநிலத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 3.7 ஆக இருந்தது.

மேலும் பாகிஸ்தான்  நாட்டில் கராச்சியிலும் 3.6 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.