டில்லி

டில்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று 6.2 ரிகடர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இன்று  டில்லி மற்றும்சுற்ற்றுப்புறம் உள்ள பல பகுதிகளில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.  மதியம் சுமார் 2.25 மணி அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.   இந்த நில நடுக்கம் டில்லியில் மட்டும் இன்றி வட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் இந்துக்குஷ் மலைப் பகுதியில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  மேலும் இந்நில நடுக்கம் இந்தியா மட்டுமின்றி சீனா, மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

2 முறை ஏற்பட்ட இந்த நில நடுக்கம் முதல் முறை 2.25 மணிக்கு ரிக்டரில் 4.9 ஆகவும் இரண்டாவதாக 2:51 மணிக்கு 6.2 ஆகவும் பதிவானது.  சேதம் குறித்த செய்திகள் எதுவும் இதுவரை வரவில்லை.