சென்னை:
மிழகத்தில் மண்டலங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ் கட்டாயம்’ என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றுமுதல் கட்டுப்பாடுகளுடன் சென்னை உள்பட 5 மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. அதுபோல சென்னை தவிர மற்ற இடங்களுக்கு  சில  பயணிகள் ரயில் சேவையும்  தொடங்கப்பட்டு உள்ளது. தினசரி 200 ரெயில்கள் மட்டும் இயக்கப்படும் என்று இந்தியன் ரெயில்வே அறிவித்து உள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும், கோவையில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கும் செல்கின்றன. இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.