புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்குப் பிரதமர் மோடி வருவதால் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வரும் 6 ஆம் தேதி அன்று தமிழகத்தைப்  போல் புதுச்சேரியிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஓர் அணியிலும்,  அதிமுக, பாஜக, என் ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஓர் அணியிலும் போட்டி இடுகின்றன.  அனைத்து அணிகளும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன.

நாளை பிரதமர் மோடி புதுச்சேரியில் அதிமுக, பாஜக, என் ஆர் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.  இதையொட்டி நாளை ஒரு நாள் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    பிரதமரின் வருகையை ஒட்டி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்றாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  மேலும் டிரோன் காமிராவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.   தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   புதுச்சேரி ஏ எஃப் டி பஞ்சாலை திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச உள்ளார்.