திருப்பதி

ராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பதி கோவில் தெப்பக்குளத்தில் குளிக்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற இருக்கிறது. அதாவது செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதியிலிருந்து 26- ஆம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து 23-ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்க உள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியாகத் திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் புனரமைக்கப்பட உள்ளது. அதாவது தெப்பக்குளத்தில் தண்ணீர் அகற்றப்பட்டு கீழ்ப் பகுதி சுத்தம் செய்யப்பட்டு குழாய்களில் இருக்கும் சிறு பழுதுகள் நீக்கப்பட உள்ளது.

எனவே இந்த பராமரிப்பு பணிகளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக் குளத்தில் குளிக்க இன்று முதல் வரும் 31-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.