டில்லி

பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை  மோசமடைந்ததால் அவர் டில்லி எம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பீகார் மாநில முன்னாள்  முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்   லாலுவுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் அவர் சிறையில் இருந்து ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆயினும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

நேற்று முன் தினம் அவருடைய உடல்நிலை மோசமாக உள்ளதாக அவர் குடும்பத்தினருக்குத் தகவல் அளிக்க்கப்ப்ட்டது.  அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, மகன்கள் தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி ஆகியோர் ராஞ்சி வந்தனர்.  அப்போது தேஜஸ்வி தனது தந்தை உடல் நிலை கவலை  அளிக்கும் விதமாக உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு நிமோனியா தொற்ரு ஏற்பட்டுள்ளது.  மேலும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  தற்போது 77 வயதாகும் லாலுவின் வயது மூப்பைக் கருத்தில் கொண்டு அவரை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற ராஞ்சி மருத்துவமனை மருத்துவர்கள் சிபாரிசு செய்தனர்.  அந்த சிபாரிசின் அடிப்படையில் அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்,.