ம்ருத்தி

ன்று அதிகாலை 2 மணிக்கு மகாராஷ்டிராவில் ஒரு பேருந்து தீப்பிடித்து 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த  பேருந்து சம்ருத்தி மஹாமார்க் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்தது.

இப்பேருந்து தீப்பிடித்ததால், அதனுள் இருந்த பயணிகளில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  தவிர 7 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.  இந்தப்பேருந்தின் டயர் வெடித்ததில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.