துபாய்:

துபாயை சேர்ந்த 5 வயது இந்திய சிறுவன் ஒரு மணி நேரத்தில் 20 புத்தகங்களை படித்து முடித்து புதிய சாதனையை படைத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளாவை சேர்ந்த ஆயுஷ் கேஎஸ் என்ற சிறுவன் ஒரு மணி நேரத்தில் 20 புத்தகங்களைப் படித்து முடித்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்சில் பாராட்டுக்குரிய இடத்தை பிடித்துள்ளதாக வளைகுடா செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்எஸ் சர்வதேச பள்ளியில், மழலையர் பள்ளி மாணவனாக இருக்கும் ஆயுஷுக்கு சொந்தமாக “ரீடிங் ரூம் பை ஆயுஷ்” என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றும் உள்ளது.

உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்கள் ஆயுஷை அழைத்து அவருடைய சேனலில் தங்களுடைய புத்தகங்களை படிக்கும்படி கேட்கின்றனர். புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களைப் படிப்பது ஆயுஷுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு வேலையாகும், நாங்கள் கடந்த முறை 40 புத்தகங்களை ஆயுஷுக்கு வாங்கிக் கொடுத்தோம், அவர் அதை தற்போது படித்துக் கொண்டிருக்கிறார் என்று வளைகுடா செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.