சென்னை: சென்னையில் உள்ள  போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலக 3வது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகம் (Narcotics Control Bureau office, Chennai), சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் உள்ளது. இங்கு, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராயப்ப ராஜு என்பவர், தடைசெய்யப்பட்ட  48 கிலோ மெத்தபெட்டமைன் என்ற  போதைபொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு, அவரை விசாரணைக்காக அழைத்து வந்து   போதை பொருள் தடுப்பு காவலர்கள் விசாரித்து வந்தனர். இந்த விசாரணை போதை பொருள் அலுவலகத்தின் 3வது மாடியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

விசாரணையின் இடைவேளையின்போது, விசாரணை கைதி ராயப்ப ராஜு , திடீரெ  3-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை உடனே  மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அலுவலர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே இவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் உடற்கூறாய்வுக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக,  திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.