திருச்சி

திருச்சி மாவட்டத்தில் முதல்வர் வருகையையொட்டி 2 நாட்கள் டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் நடைபெறுகிறது. இதையொட்டி 11 ஏக்கரில் சுமார் 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டம் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.   இந்த  வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொள்ள தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி செல்கிறார்.

எனவே நாளை மற்றும் நாளை மறுநாள் திருச்சி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.  முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.