சென்னை: தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்கலாம் என  தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையை பொருத்த வரையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொதத எண்ணிகை 1,07,109 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், 7வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளும் தமிழக அரசு அளித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.